×

தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் 3 நாட்கள் கூடுதலாக இயக்கப்படும்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக மெட்ரோ ரயில் சேவை, இன்று முதல் 3 நாட்களுக்கு இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் 3 நாட்கள் கூடுதலாக இயக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai ,
× RELATED தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில்...